Tuesday, November 17, 2015

அமைதியை விரும்பும் இந்தியர்கள்...!

அமைதியை விரும்பும் இந்திய மக்கள்....!

புத்த மத தலைவர் தலாய் லாமா...!!


ஜலந்தரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தலாய் லாமா இந்திய மக்கள் அனைவரும் அமைதியுடன் வாழ விரும்புவதாக கூறினார்.

சகிப்புத் தன்மையுடன் அனைத்து தரப்பு மக்களுடன் இணந்து வாழ்வதையே இந்தியர்கள் விரும்புகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இதைத்தான் காட்டுவதாக தலாய் லாமா மேலும் கூறினார்.

நாட்டில் சகிப்புத் தன்மை மற்றும் மத ஒற்றுமைக்கு எதிராக தொடர்ந்து குந்தகம் விளைவிக்கும் மர மண்டைகளுக்கு புரிந்தால் சரி.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: