Thursday, November 26, 2015

சபாஷ் நிதிஷ் குமார்...!

வாழ்க நிதிஷ் குமார்...!


பீகார் மாநிலத்தில் வரும் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மது விற்பனைக்கு தடை என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

இந்த செய்தி உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டதால்தான் நிதிஷ் குமாரை ஐந்தாவது முறையாக முதலமைச்சர் பதவியில் அமர்த்தி பீகார் மக்கள் அழகு பார்க்கிறார்கள்.

அதற்கு உடனடியாக பலன் கிடைத்துள்ளது.

பக்கத்து மாநிலங்களில் மது விற்கிறார்கள்.

அதனால் பீகாரில் மது விற்பனைக்கு தடை விதிக்க முடியாது என்ற சப்பை காரணங்களை நிதிஷ் கூறவில்லை.

தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி பீகாரில் மது விலக்கு அமல்படுத்த துணிந்து முடிவு எடுத்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டு விட்டார்.
'
மக்கள் நலனில் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் ஆகியோரின் நலனில் அதிக அக்கறை கொண்ட நிதிஷ் குமார் வாழ்க பல்லாண்டு.

அவரது மக்கள் நலப்பணிகள் மேலும் சிறக்கட்டும்

மது கொள்கையில் கேரளா, பீகார் மாநிலங்கள் எடுத்த முடிவை போன்று தமிழகமும் விரைவில் நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

இதுதான் அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பு.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நல்ல முடிவை எடுத்து மதுவால் தள்ளாடும் தமிழகத்தை காப்பற்ற வேண்டும்.

எஸ் ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: