Tuesday, November 17, 2015

தீவிரவாதத்திற்கு எதிராக போர்....!

தீவிரவாதத்திற்கு எதிராக ஜியாத் போர்....!மவுலானா மதானி அழைப்பு....!!


அப்பாவி மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொல்லும்    தீவிரவாதிகளுக்கு எதிராக ஜீயாத் செய்ய இஸ்லாமியர்கள் முன்வர வேண்டும் என ஜாமியத்துல் உலமா-யி-ஹிந்த் தலைவர் மவுலானா மாமூத் மதானி அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூகத்தில் நச்சு கிருமியாக இருக்கும் தீவிரவாதத்தை வேரோடு அறுத்து எரிய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை ஒருபோதும் எற்றுக் கொள்ள முடியாது என்றும், ஜியாத் என்ற போர்வையில் இதுபோன்ற செயல்கள் நடப்பதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும் என்றும் மவுலானா கேள்வி எழுப்பினார்.

இஸ்லாத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் கொடுமைகாரர்களை வீழத்த  அனைத்து இஸ்லாமிய நாடுகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதானி கேட்டுக் கொண்டார்.


ஒரு மனித உயிரை காப்பாற்றுவது மனித இனத்தையே காப்பாற்றியதற்கு சமம் என்பதே இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனை என்று கூறிய மவுலானா, இதற்கு மாறாக நடந்து அப்பாவி மக்களை கொல்லும் தீவிரவாதிகளை எதிர்த்து போராட அனைத்து முஸ்லிம்களும் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தீவிரவாதத்திற்கு எதிராக டெல்லி, ஐதராபாத், மும்பை உட்பட நாடு முழுவதும் இன்று போராட்டம், பேரணி நடத்தப்படும் என்றும்  அவர் தெரிவித்தார்.

இஸ்லாத்தின் பெயரால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது மிகப் பெரிய கவலை அளிப்பதாகவும், எனவே அதை உடனே தடுத்த நிறுத்த வேண்டும் என்றும் இதற்காக அனைத்து முஸ்லிம்களும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் மவுலானா மதானி கேட்டுக் கொண்டார்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: