Saturday, November 14, 2015

இவர்கள் மனிதர்களே இல்லை...!

இவர்கள் மனிதர்களே இல்லை...!


பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நான்கு வெவ்வேறு இடங்களில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 129 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை காலை 6 மணி செய்திக்காக கணினியில் தட்டியபோது கைகள் நடுங்கின.

மனதில் ஒருவிதமான வேதனை ஏற்பட்டது.

மேலும் தாக்குதல் தொடர்பான விஷூவல் காட்சிகளை பார்த்தபோது சே இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா என மனம் நினைத்தது.

மனித பிறப்பு எவ்வளவு அற்புதமானது.

மனித உயிர் எவ்வளவு உயர்ந்தது.

இத்தகைய அற்புத உயர்ந்த உயிரை அநியாயமாக பறிக்க இந்த பிசாசுகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என மனம் கேட்டுக் கொண்டது.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அது உண்மையென்றால் இஸ்லாத்தின் பெயரால் இதுபோன்ற தாக்குதலை நடத்திய அந்த மனித உருவில் இயங்கும் பிசாவு கூட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு இஸ்லாத்தில் இடம் இல்லை.

துளிகூட அனுமதி இல்லை.

இஸ்லாமியர்கள் யாரும் இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்களை ஆதரிப்பதில்லை.

இத்தகைய தாக்குதல்களை மனதளவில் கூட நினைத்து இஸ்லாமியர்கள் சந்தோஷம் அடையக்கூடாது.

ஜியாத் என்ற போர்வையில் நடத்தப்படும் மனித குலத்திற்கு எதிரான இத்தகைய தாக்குதல்களை
சிறிய அளவில் கூட ஆதரிக்க கூடாது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: