Tuesday, November 10, 2015

இன்னும் புத்தி வரவில்லை....!

இன்னும் புத்தி வரவில்லை....!


பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பிறகுகூட பாஜக மற்றும் விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் இன்னும் திருந்தவில்லை.

மீண்டும் தங்களது பழைய வேலையை காட்டத் தொடங்கி விட்டார்கள்.

கர்நாடக காங்கிரஸ் அரசு சார்பில் அம்மாநிலம் முழுவதும் மாவீரன் மைசூர் வேங்கை திப்பு சுல்தானின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாஜக மற்றும் இந்து அமைப்புகள், விழாவை புறக்கணித்து வருகின்றன.

இந்நிலையில், குடகு மாவட்டத்தில் இந்து பரிஷத் அமைப்பு சார்பில் விழாவிற்கு எதிராக இன்று (10-11-2015) போராட்டம் நடைபெற்றது.

இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.

எனினும், அனுமதியை மீறி போராட்டம் நடந்தது.

இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு உருவாகி,பதற்றம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தால், போலீசார் தடியடி நடத்தினர்.

இதில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த வன்முறையைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.


பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் போராட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் சித்தராமையா, திப்பு சுல்தான் பிறந்த நாள் விழாவை வேண்டும் என்றே, இந்து அமைப்புகள் எதிர்த்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மாநிலத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் விழாவை வரவேற்றுள்ளதாக கூறியுள்ள அவர், திப்பு சுல்தான் இந்துகளுக்கு எதிரானவர் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக வாழ விரும்புகிறார்கள்.

இதுதான் பீகார் தேர்தல் முடிவுகளின் மூலம் நாட்டிற்கு கிடைத்த படிப்பினை.

ஆனால், இதனை பாஜக மற்றும் இந்து அமைப்புகள் உணர்ந்ததாக தெரியவில்லை.

மீண்டும் தங்களது சுயரூபத்தை காட்டத் தொடங்கி விட்டார்கள்.

இந்த முறையை திப்பு சுல்தான் பிறந்த நாள் விழாவை காரணம் காட்டி கர்நாடகாவில் வன்முறையை அவிழ்த்து விட்டுள்ளார்கள்.

இதன்மூலம் நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் எதிர்ப்பை அவர்கள் சம்பாதிக்க போவது உறுதி.

பீகார் தேர்தல் முடிவுகளுக்கு பிறகும் பாஜக மற்றும் இந்து அமைப்புகளுக்கு புத்தி வரவில்லை என்றால் நாம் என்ன செய்வது...?

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: