Friday, November 20, 2015

உலகின் முதல் ராக்கெட் ஏவுதளம்...!

உலகின் முதல் ராக்கெட் ஏவுதளம் திப்பு சுல்தானின் ஸ்ரீரங்கப்பட்டணம்....!

விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை தகவல்....!!


ஜே.எஸ்.எஸ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் மாநாட்டில் பங்கேற்பதற்காக மைசூருக்கு வந்த விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளையிடம் மைசூர் வேங்கை மாவீரன் திப்பு சுல்தானின் விஞ்ஞான ஆர்வம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த சிவதாணுபிள்ளை பண்டைய அறிவு மற்றும் அறிவியலுக்கு இந்தியாவின் பங்களிப்பு போற்றக் கூடியது என்றார்.

பல கண்டுபிடிப்புகள் இந்தியாவில் இருந்து தொடங்கியுள்ளது.

முதன்முதலாக இந்தியாவின் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் இருந்துதான் விண்ணை நோக்கி ராக்கெட் பறந்தது.

அங்குள்ள ராக்கெட் ஏவுதளத்தைப் பார்வையிட்டு 2006-இல் அறிக்கை அளித்தேன்.

அதனடிப்படையில், ஏவுதளத்தை புனரமைக்கும் பணியை ஏஎஸ்ஐ மேற்கொண்டது.

ஆனால், அந்தப் பணி முழுமையாக முடிக்கவில்லை என்றார் அவர்.

முன்னதாக, மாநாட்டில் பேசிய சிவதாணுபிள்ளை, உலகில் முதன்முதலாக ராக்கெட் ஸ்ரீரங்கபட்டணாவில் இருந்துதான் ஏவப்பட்டது.

இதை பெரும்பாலானோர் அறியாமல் இருக்கின்றனர்.

ஆங்கிலேயர்களை வீழ்த்துவதற்காக அவர்களுக்கு எதிரான போரில் திப்பு சுல்தானால் ராக்கெட் பயன்படுத்தப்பட்டது என்றார் விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை


ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு உயிரிழந்த மைசூர் வேங்கை மாவீரன் திப்பு சுல்தான் ஆட்சியை குறித்து இதுபோன்ற பல நல்ல தகவல்கள் தொடர்ந்து வெளிவந்துக் கொண்டிருக்கும் நிலையில்,  வேண்டும் என்றே சர்ச்சையை கிளப்பி மோதல்களை வெடிக்கச் செய்து வரும் மரமண்டைகள் இனியாவது திருந்துவார்களா என்பதுதான் நமது கேள்வி.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: