Friday, November 13, 2015

அரை லூஸ்.....!

அரை லூஸ்.....!


தெலுங்கு மகா ஸ்டார் சரண் தேஜா நடித்த புரூஸ்லி என்ற திரைப்படத்தில் சிபிஐ அதிகாரியாக வரும் காமெடி நடிகரை அரை லூசாக சித்தரித்து இருப்பார்கள்.

இந்த அரை லூஸை தன் கூட வைத்துக் கொண்டு கதாநாயகன் சரண் தேஜா என்ற செய்ய போகிறார் என படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகர்களும் நினைப்பார்கள்.

ஆனால் படத்தை மேலே கொண்டு செல்ல அந்த அரை லூஸ்தான் முக்கியமாக இருப்பார்.

ஆக உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் சிலர் அரை லூஸ் தனமாக காரியங்களை செய்தாலும் அவர்களை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டாம்.

ஏனென்றால் சில நேரங்களில் அவர்கள் உங்களுக்கு உதவ கூடும்.

நான் தினமும் ஒரு அரை லூசை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

அவர் என்ன செய்கிறார் என்பது அவருக்கே புரிவதில்லை.

சில நேரங்களில் பலரை பயங்கரமாக கடுப்பு ஏற்றவும் செய்கிறார் இந்த அரை லூஸ்.

அவர் செய்யும் பணிகளை பார்க்கும் போது என்ன இப்படி அரை லூஸ் தனமாக செயல்படுகிறார் என வெறுப்பாக நினைக்க தோன்றும்.

இருந்தாலும் சில சமயங்களில் அவரை அறியாமல் நல்லதையும் செய்து விடுகிறார்.

எனவே இவரைப் போன்ற அரை லூஸ்கள் உங்களுக்கு தொடர்ந்து தொந்தரவாக இருந்தாலும் அவர்களை ஒதுக்கி தள்ள வேண்டாம்.

அவர்களின் காரியங்களை பொறுத்து கொள்ளுங்கள்.

ஏனென்றால் எப்போதாவது அவர்கள் உங்களுக்கு மறைமுகமாக அல்லது நேரடியாக அவர்களை அறியாமலேயே உதவ கூடும்.

நல்லதை செய்யக்கூடும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: