Friday, November 13, 2015

மோடி மீது புகார்....!

மோடி மீது 46 இங்கிலாந்து எம்.பி.க்கள் புகார்....!


இந்தியாவில் மதசகிப்புத் தன்மைக்கு பாதிப்பு.

இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகமாக நடக்கின்றன.

அரசியல் காரணங்களுக்காக ஏராளமானோர் கைது செய்யப்பட்டு இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இப்படிப்பட்ட அசாதாரண சுழல் இந்திய நாட்டில் தற்போது நிலவுகிறது.

இதுகுறித்து இங்கிலாந்துக்கு வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் பிரச்சினை எழுப்பி விவாதிக்க வேண்டும்.

இந்தியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி மோடியிடம் வலியுறுத்த வேண்டும்.

அழுத்தம் கொடுக்க வேண்டும்.


இப்படி பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்து இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுக்கு அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 46 பேர் கடிதம் எழுதி இருக்கிறார்கள்.

இந்த கடிதத்தில் எதிர்க்கட்சியான லேபர் பார்ட்டி உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் கையெழுத்து போட்டுள்ளார்கள்.

மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மிகப் பெரிய சாதனை செய்து விட்டதாக ஆஹா ஓவோ என உள்ளூர் பாஜக தலைவர்கள் ஆட்டம் போட்டு வரும் நிலையில் இங்கிலாந்து எம்.பி.க்கள் 46 பேர் மோடி ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் நடந்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

மோடி அரசின் புகழ் இங்கிலாந்தில் அதுவும் அவர் அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சமயத்தில் நாறுவது என்னவென்று சொல்வது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: